புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் வான்வழித் தாக்குதலை இந்தியா நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இருப்பினும், பாலகோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் தொடர்பான உண்மை இன்னும் அரசால் பகிரப்படவில்லை. பாலகோட்டில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த இலக்கையும் இந்தியா தாக்கவில்லை என்று பல்வேறு அமைப்புகள் கூறி வருகின்றன. ஜனாதிபதி உரையில் இந்தியா-சீனா எல்லையில் பாதுகாப்பு பிரச்னை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் லடாக்கில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000 சதுர கிமீ நிலம் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனக் கொள்கையில் மோடி அரசு பலமுறை தோல்வியடைந்துள்ளது . இன்று மாலத்தீவில் என்ன நடக்கிறது. ‘இந்தியா அவுட்’ கோஷத்தின் பேரில் அந்த நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் எப்போதும் பாதுகாப்பு விஷயங்களில் அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியாக, பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை முன்னிலைப்படுத்துவது எங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
DontuseRam-politicaltool-winelections-AdirranjanChowdhury-LokSabha
The post தேர்தலில் வெற்றி பெற ராமரை அரசியல் கருவியாக பயன்படுத்த வேண்டாம்: மக்களவையில் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேச்சு appeared first on Dinakaran.