தேர்தல் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை

டெல்லி: மக்களவை தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த ஆணையம் தடை விதிகப்பட்டுள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு அனுமதியில்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

The post தேர்தல் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை appeared first on Dinakaran.

Related Stories: