இமாச்சலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் கார் விபத்தில் சிக்கினார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி உள்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. வெற்றியுடன் காரில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சைதை துரைசாமி மகன் வெற்றியை போலீசார் தேடி வருகின்றனர்.
The post இமாச்சலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகனை காணவில்லை appeared first on Dinakaran.