ஸ்ரீ தேவி மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உச்சநீதிமன்றம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசின் கடிதங்களை தீப்தி காண்பித்தார். இந்த ஆவணங்கள் போலியானவை என கூறப்படுகிறது. வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தீப்தி, அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் தீப்தியின் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியாவில் உயர் பதவி வகிக்கும் பிரமுகர்களின் கடிதங்களை போலியாக தயாரித்ததாக தீப்தி, அவரது வழக்கறிஞர் ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி மறைக்கப்பட்டதாக கூறி பிரதமரின் போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.