விகேபுரம் சேனைத்தலைவர் பள்ளி வைர விழா

விகேபுரம்,பிப்.4: விகேபுரம் சேனைத்தலைவர் துவக்கப்பள்ளியின் வைர விழா நடந்தது. இதில் பள்ளித் தாளாளர் மரிய பீட்டர் ராஜ் தாளாளர் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் அமலகிறிஸ்டி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வேதம்ஜாண் கென்னடி வரவேற்றார். நர்சரி அன்ட் பிரைமரி தலைமை ஆசிரியை சாந்திபத் ரோஸ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள் கலந்துகொண்டு விளையாட்டு மற்றும் படிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக வேலாயுதம், கவுன்சிலர் விக்னேஷ், திமுக வார்டு செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை நான்காம் வகுப்பு மாணவர்கள் விஷ்ணு, ஆதிஷ், பவானி, சுதா, ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா  ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

The post விகேபுரம் சேனைத்தலைவர் பள்ளி வைர விழா appeared first on Dinakaran.

Related Stories: