பெருந்துறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு, பிப்.4: பெருந்துறை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் பெருந்துறை புதிய பஸ் நிலையம் முன்பு தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். பெருந்துறை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், பெருந்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் உதவி கோட்ட பொறியாளர் கதிரேஸ், உதவி பொறியாளர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள், பெருந்துறை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சாலை பாதுகாப்பு குறித்த பதாதைகளை ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரதரங்களை வழங்கினர்.

The post பெருந்துறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: