இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற கொசுறு சூர்யா (23), விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (23) என்பது தெரியவந்தது. இருவரும் சரண்குமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.