பொது வாழ்வில் அவரது பல ஆண்டு கால சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டது. தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அத்வானி இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் ஜனாதிபதி முர்மு மகிழ்ச்சி அடைவதாக கூறப்பட்டுள்ளது. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜ தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தொலைபேசியில் அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கடந்த மாதம், பீகார் முன்னாள் முதல்வரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்த தலைவருமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பாஜ கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவித்தார் appeared first on Dinakaran.