அதேபோல், மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.கே.நகரில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைந்தக்கரையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உணவருந்தினர்.
இது தவிர, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரரேசுவரர் கோயிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மல்லீஸ்வரர் சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அருணாச்சலேசுவரர் கோயிலில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, வடபழநி முருகன் கோயிலில் அரசு தலைமை கொரடா செழியன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உணவருந்தியதோடு, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அண்ணா நினைவு தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து appeared first on Dinakaran.