மாஜி முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல்

 


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில மாஜி முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன், அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அசோக் கெலாட் வெளியிட்ட பதிவில், ‘வானிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எனக்கு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால் அடுத்த ஏழு நாட்களுக்கு யாரையும் என்னால் சந்திக்க முடியாது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

The post மாஜி முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: