இதையடுத்து ஜார்க்கண்டின் 12வது முதல்வராக சம்பாய் சோரன் நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நேற்று பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலம்கிர் ஆலம், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சத்யானந்த் போக்தா ஆகியோர் மாநில அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுதினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாஜவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 38 எம்எல்ஏக்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள ரிசார்டில் தங்கியுள்ள அவர்கள் ஜார்க்கண்ட் திரும்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஹேமந்த் சோரன் தொடர்ந்த ரிட் மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஹேமந்த் சோரனை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
The post ஜார்க்கண்ட் நெருக்கடி தீர்ந்தது புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவி ஏற்பு: 5ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.