தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிப்.7ல் பிரேமலதா ஆலோசனை

சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 7ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

இதில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்தா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து பிரேமலதா கருத்து கேட்கிறார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம் ஆகும்.

 

The post தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிப்.7ல் பிரேமலதா ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: