பெண் ஐ.பி.எஸ்.க்கு பாலியல் தொல்லை வழக்கு: ராஜேஷ் தாஸின் மனு பிப்.5க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்.5க்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2ம் நாளாக ஆஜரான ராஜேஷ் தாஸ் சுமார் 1.30 மணி நேரம் தனது வாதங்களை முன்வைத்தார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

 

The post பெண் ஐ.பி.எஸ்.க்கு பாலியல் தொல்லை வழக்கு: ராஜேஷ் தாஸின் மனு பிப்.5க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: