பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்டார் ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ மறைவு திருச்சி எம்பி இரங்கல்

 

திருச்சி, பிப்.2: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் மறைவுக்கு திருச்சி எம்பி திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்லாண்டு காலம் தன்னை அர்ப்பணித்து, ஆலங்குடி தொகுதி மக்களுக்காகவும், புதுக்கோட்டை மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சிறந்த அரசியல் தலைவராகவும், சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ராஜசேகரன் மறைவு செய்தி கேட்டு வருந்தினேன்.

அன்னாரது மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், புதுக்கோட்டை மக்களுக்கும் பேரிழப்பாகும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார், நண்பர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்டார் ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ மறைவு திருச்சி எம்பி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: