2023-2024ம் கல்வியாண்டிற்கு புதுப்பித்தல் மாணவருக்கான விண்ணப்பங்கள், சென்ற ஆண்டு தரவு தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து https;//ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பரீசீலிக்கப்பட்டு வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023-2024ம் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க நேற்று (1ம் தேதி) முதல் மேற்காணும் இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வங்கியுடன் இணைக்காத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாது. இதை தெரிவித்து அவர்களை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தொடர்புடைய கல்லூரி, பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.