திருவையாறில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவையாறு: திருவையாறு ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 103 பேருக்கு டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 41 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் தலைவர் யூஜின்ராஜ், திட்ட இயக்குனர் ராமகிருஷ்ணன உடனடி முன்னாள் தலைவர் கணேசன், தலைவர் தேர்வு செந்தில்குமார் ராமநாதன் முகமது பாரூக் மண்டலம் 2 உதவி ஆளுநர் கருணா, பொறுப்பாளர்கள் மற்றும் திருவையாறு மற்றும் கண்டியூர் பாவா மெடிக்கல் ஜாய் நர்சிங் கல்லூரி மாணவிகள் நிர்வாகிகள் செய்திருந்தனர்.தியாகி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கோரிக்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

The post திருவையாறில் இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: