அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன், அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்கப் போகிறது என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்.தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய யுஜிசி நிர்வாகிகள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பான செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.
The post இட ஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சை யுஜிசி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.