கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் தவறானது: தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு

சென்னை: கோயம்பேடு பேருந்து முனையத்தை காலி செய்து, அந்த இடத்தை லுலு மால் அமைக்க அரசு தரப்போவதாக பரவும் செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவலை உண்மை என நம்பி, கட்சியினர் சிலரும் தனி நபர்களும் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.

The post கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் தவறானது: தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு appeared first on Dinakaran.

Related Stories: