2 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைபயணம் இன்று பீகாரை அடைகிறது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான (ஆர்ஜேடி) கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பாஜவுடன் கைகோர்த்து, 9வது முறையாக பீகார் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா மற்றும் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் ராகுலின் நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
The post அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம் appeared first on Dinakaran.