திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி டிராக்டர் பேரணி

திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல்லில் வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். குமரன் பூங்காவில் துவங்கிய ஊர்வலம், மெயின் பஜார் வழியாக சென்று பெரியார் சிலை முன்பு நிறைவடைந்தது. பேரணியில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாஜக மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அஜய் கோஷ், சிஐடியு மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன், செயலாளர் பிரபாகரன், எல்.பி.எப். சார்பில் அழகர்சாமி, அரசப்பன், ஏ.ஐ.டி.யு.சி. ராஜாங்கம், ஐ.என்.டி.யு.சி. கண்ணன், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சுருளியாண்டவர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாவட்ட தலைவர் வசந்தாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி டிராக்டர் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: