குடிநீர் தொட்டி கட்டுமான பணி

தர்மபுரி: தர்மபுரி அதகப்பாடி மேல்நிலை பள்ளியில், நபார்டு வங்கி நிதியின் கீழ் ₹16.75 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டும் பணிக்கு பூமிபூஜை நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அதகப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பஸ்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், கௌதம், இளங்கவி, பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post குடிநீர் தொட்டி கட்டுமான பணி appeared first on Dinakaran.

Related Stories: