வழக்கு நிலுவையில் உள்ளதால் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை முடங்கி விடும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிடுவோம் என்கிறார். மோடியுடன் கூட்டணி இல்லை எனக் கூறும் எடப்பாடி, ஜெயலலிதா இந்த லேடியா – மோடியா என்றாரே, அது போல் இந்த எடப்பாடியா – மோடியா என்று கூற தைரியம் உண்டா? எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது. எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மட்டுமே 40 தொகுதிகளும் வெற்றி பெற முடியும்.
The post மக்களவை தேர்தலில் இரட்டை இலை முடங்கும் அபாயம்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி appeared first on Dinakaran.