4 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 67 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பணியாற்றி வரும் 67 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து தஞ்சாவூர் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:- பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி, நாகை டவுனுக்கும், தஞ்சை குற்றப்பிரிவு-2 இன்ஸ்பெக்டர் அறிவழகன் நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கும், தஞ்சை குற்றப்பிரிவு -3 இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி திருவாரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், வல்லம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பூம்புகாருக்கும், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, வடுவூருக்கும், பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி, திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், மன்னார்குடிக்கும், கும்பகோணம் கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், மயிலாடுதுறை டவுனுக்கும், நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, நன்னிலத்துக்கும், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், நாகை குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 4 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 67 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: