சிவகிரியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

சிவகிரி,ஜன.24: சிவகிரியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கிவைத்தார். சிவகிரி வட்டார பொதுமக்களின் மருத்துவ நலனைக் கருத்தில் கொண்டு, இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடந்தது. திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, மருத்துவர் அணி மாவட்டத் தலைவர் சுமதி வேல்சாமி, பஞ். தலைவர் ஜோதி முன்னிலை வகித்தனர். மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் செண்பக விநாயகம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கிவைத்தார்.

முதன்மை விருந்தினர்கள் தனுஷ் குமார், சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் வாழ்த்திப் பேசினர். இதில் வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, கிப்ட்சன், நகரச் செயலாளர்கள் சங்கரன்கோவில் பிராகஷ், புளியங்குடி அந்தோனிசாமி, வாசு பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சார்பு அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வீரமணி, கார்த்திக், முத்துலட்சுமி, விக்னேஷ் ராஜா, கிருஷ்ண லீலா, மைதீன் கனி, முத்துக்குமார், கட்டபொம்மன், சுந்தர், சங்கர், சேது சுப்பிரமணியன், திவான் அலி, பொன் ரமேஷ், மாரிச்சாமி, மாரியப்பன், கிருஷ்ணா, வாசு பேரூராட்சி துணை தலைவர் லைலா பானு, மாவட்ட பிரதிநிதிகள் நல்லசிவன், கந்தராஜ், கூட்டுறவு சங்க தலைவர் மருதுபாண்டியன், பொறியாளர் கணேஷ் கண்ணன், தங்கராஜ், சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் செய்திருந்தார்.

The post சிவகிரியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை appeared first on Dinakaran.

Related Stories: