பொன்முடி மீதான குவாரி வழக்கு ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்பி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகியோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 8ம் தேதி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் மனு மீது உத்தரவு பிறப்பிப்பதற்காக நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்காக வரும் 29ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post பொன்முடி மீதான குவாரி வழக்கு ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: