இந்த நிறுவனம் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக துல்லியமான கண்ணாடி செயலாக்கம் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,தொழில் துறை செயலாளர் அருண் ராய், கைடன்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவன தலைவர் மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் அசோக் குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குநர் சுதிர் பிள்ளை, பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் பாவ்னா சிங்கல், கார்னிங் இந்தியா நிறுவன வணிக இயக்குநர் திவ்யான்சு கவுதம், அரசாங்க விவகாரங்கள் இயக்குநர் அமித் குமார் ஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் ரூ.1003 கோடியில் மின்னணு சாதன கண்ணாடிப்பொருள் உற்பத்தி ஆலை: தமிழ்நாடு அரசு – பிக் டெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது appeared first on Dinakaran.