கார்கே தலைமையில் நாளை முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே தொடங்கி விட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரடியாக சந்தித்து பேச உள்ளார். முதல் கூட்டம் நாளை தெலங்கானாவில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். அதை தொடர்ந்து ஜனவரி 28ம் தேதி உத்தரகாண்டிலும், 29ம் தேதி ஒடிசாவிலும், பிப்.3ல் டெல்லியிலும், கேரளாவில் பிப்ரவரி 4ம் தேதியும், இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி 11ம் தேதியும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. ஜார்க்கண்டில் பிப்ரவரி 15ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

The post கார்கே தலைமையில் நாளை முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: