காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை

போச்சம்பள்ளி, ஜன.23: மத்தூர் அருகே உள்ள சோனரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி மகன் சர்மா (23). இவர் ஓசூர் தனியார் கம்பெனியில் மினி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண் காதலிக்க மறுத்ததால், விரக்தி அடைந்த சர்மா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: