2 குழந்தைகளின் தாயை கடத்திச்சென்ற வாலிபர்

ஊத்தங்கரை, ஜூன் 26: ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் பில்லா (45). இவரது மனைவி மணி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 22ம் தேதி மணி வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பில்லா ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதில் எனது மனைவியை தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த விஜி (26) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 குழந்தைகளின் தாயை கடத்திச்சென்ற வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: