கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியலாளர் கோகுலகண்ணன், கனிமவள தனித்துணை தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி தரப்பு திருமலை நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2 கருப்பு கிரானைட் கற்களுடன் சென்ற லாரியை சோதனை செய்ததில், அனுமதி சீட்டு இன்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: