ஓசூர் வாலிபர் குண்டாசில் கைது

ஓசூர், ஜூன் 29: ஓசூர் பாகலூர் அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் வசீகரன் (21). இவர் கடந்த மாதம் போதையில் ஓசூர் பஸ் நிலையத்தில், டூவீலர்களை நிறுத்துவதில் 3 பேரிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வசி (எ) வசீகரனை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். இவர் மீது சிப்காட், டவுன் காவல் நிலையங்களிலும் அடிதடி வழக்குகள் உள்ளது. இதனால், இவரை குண்டாசில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை, ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சரயு வசீகரனை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.

The post ஓசூர் வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: