திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார் சோனியா காந்தி

சேலம்: சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக இளைஞரணி மாநாட்டில் “மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நமது குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள், நமது தேசத்தின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்பதற்கு இது மிகவும் சரியான நேரத்தில் முன்முயற்சியாகும்.

The post திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார் சோனியா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: