கேலோ இந்தியா வாள்வீச்சு தமிழ்நாட்டுக்கு தங்கம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் மகளிர் வாள்வீச்சில் தமிழ்நாடு வீராங்கனை அன்புலஸ் கோவின் தங்கப் பதக்கம் வென்றார். கேலோ இந்தியா தொடரில் வரும் 31ம்தேதி வரை சைக்ளிங், பேட்மின்டன், குத்துச்சண்டை, வாள்வீச்சு, டேபிள் டென்னிஸ் ஆகிய 5 பிரிவுகளுக்கான போட்டிகள் வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழக மைதானத்தில் நடத்தப்படுகின்றன. அதன்படி, நேற்று வாள்வீச்சு மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.

வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மகாராஷ்டிரா, அரியானா, குஜராத், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 31 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புலஸ் கோவின் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அரியானாவை சேர்ந்த தேவ்ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த அஸ்வினி சௌர்யா 2ம் இடம், டெல்லி, மணிப்பூர், மகாராஷ்டிராவை சேர்ந்த 4 பேர் 3ம் இடம் பிடித்தனர். வாள்வீச்சு போட்டியில் வென்றவர்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பதக்கங்களை வழங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரமேஷ், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கேலோ இந்தியா வாள்வீச்சு தமிழ்நாட்டுக்கு தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: