இதை தொடர்ந்து சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘நான் இதுவரை அம்மா (ஜெயலலிதா) இல்லாமல் கொடநாடு வந்ததில்லை. அவருக்கு ரொம்ப பிடித்த இடம் என்பதால் சாஸ்திரம் மற்றும் வாஸ்துபடி, இந்த இடத்தை தேர்வு செய்து ஜெயலலிதாவிற்கு சிலை நிறுவி, மணி மண்டபம் கட்ட இன்று பூமி பூஜை செய்யப்பட்டது. குறிப்பாக கொடநாடு காட்சி முனை சுற்றுலா தலமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவிற்கு அமைக்கப்படும். அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் சிலை மற்றும் மணி மண்டபம் திறக்கப்படும்’’ என்றார்.
The post கொடநாடு எஸ்டேட்டில் ஜெ.வுக்கு சிலை, மண்டபம் அமைக்க பூமி பூஜை: சசிகலா பங்கேற்பு appeared first on Dinakaran.