டிரைவருக்கு வலிப்பால் பஸ் விபத்து: 10 பேர் படுகாயம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் புறப்பட்டது. டிரைவராக நடராஜன் (59) இருந்தார். அப்போது இந்த பஸ் திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை வழியாக மண்ணியாற்று பாலம் அருகே சென்றபோது டிரைவருக்கு திடீரெனவலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மண்ணியாற்று பாலம் அருகே நிலை தடுமாறி சாலையின் வலது பக்கம் இருந்த ஜல்லிமேட்டில் ஏறி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post டிரைவருக்கு வலிப்பால் பஸ் விபத்து: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: