தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.13: காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சிறுபான்மை அணி செயலாளர் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் சுபேர்கான் முன்னிலை வகித்தனர். இதில், சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை வேகப்படுத்த வேண்டும். பாகநிலை முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும்் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து விருப்பு வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும்’ என்றார். இக்கூட்டத்தில், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் குமார், படுநெல்லி பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பகுதி செயலாளர்கள் திலகர், தசரதன், சந்துரு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: