தமிழ் கூடல் நிகழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜன.14: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ரவி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை தொகுத்து வழங்கினார். சொல்லரசு, தமிழ்அரசு, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு அறிய பல கருத்துகளை, தமிழ் கூடல் நிகழ்ச்சி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

The post தமிழ் கூடல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: