ம.பி.யில் பெண் நீதிபதிகள் 6 பேர் பணி நீக்கம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

புதுடெல்லி: மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டத்துறைக்கு கீழ் இயங்கும் நிர்வாக குழு மேற்கொண்ட ஆய்வில் ஆறு பெண் நீதிபதிகளின் பணி திருப்திகரமாக இல்லை என்று வெளிப்படையாக அறிக்கை வழங்கி இருந்தது. அதன்படி மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில அரசு ஆறு பெண் நீதிபதிகளையும் கடந்தாண்டு ஜூன் மாதம் 6ம் தேதி பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகரத்தினா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரிக்க உள்ளது.

The post ம.பி.யில் பெண் நீதிபதிகள் 6 பேர் பணி நீக்கம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: