சம்பவத்தன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு சென்றபோது, மிகவும் ஆபாசமான முறையில் நாஞ்சில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், அவரை கண்டித்துள்ளார். அப்போது அவரை ஆபாசமாக பேசி மிரட்டி சென்ற நாஞ்சில் ஜெயக்குமார், பின்னர் போனில் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதுடன், பெண் டாக்டரின் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று கூறியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
The post டாக்டருக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.