அனுமன் ஜெயந்தி விழா

 

ஜெயங்கொண்டம், ஜன.12: உடையார்பாளையம் வேலப்பன் செட்டியார் ஏரிக்கரை தென்புறம் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பஞ்ச முக ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடைபெற்றுவரும் மார்கழி மாத உத்சவத்தோடு, நேற்று காலை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, மாலை 4 மணி முதல் வெண்ணெய் காப்பு சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது. 6 மணியளவில் மகா தீபாராதனை மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்பிரகார ஊர்வலமும் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post அனுமன் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Related Stories: