இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “கடந்த 1952 ஆண்டு முதல், ஒரே நேரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அளவில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சில ஆண்டுகளாக அதே நடைமுறை இருந்தது, ஆனால் பின்னர் மாறிவிட்டது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாடாளுமன்ற அமைப்பில் மத்திய மற்றும் மாநில தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுவது அடிப்படை அம்சமாகும். இது இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இது மாற்றப்படக்கூடாது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
The post ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை: ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் appeared first on Dinakaran.