பொங்கல் பரிசு தொகுப்பு

ராசிபுரம், ஜன.11: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கார்டுதாரர்களுக்கு ₹1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பேரூராட்சி தலைவர் சுப்ரமணியம் வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பேரூர் பொருளாளர் பத்மநாபன், துணை செயலாளர் தியாகராஜன், மீனாட்சி, வார்டு கவுன்சிலர்கள் சீனிவாசன், தனபால், காளியன்ணன், கிருஷ்ணமூர்த்தி, உஷாராணி, பானுமதி, கீதா, கீதா, கந்தசாமி, ஒன்றிய பிரதிநிதி வெங்கடேஷ், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: