₹22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு, மே 15: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் குவிண்டால் ₹5569 முதல் ₹7579 வரையில் விற்பனையானது. இதில் 100 மூட்டை பருத்தி ₹1.81 லட்சத்திற்கு விற்பனையானது. எள் 212 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் கருப்பு எள் கிலோ ₹109 முதல் ₹140.90 வரையிலும், சிவப்பு எள் ₹116.20 முதல் ₹144.50 வரையிலும், வெள்ளை எள் ₹122 முதல் ₹141.50 வரையிலும் விற்பனையானது. இதில் ₹20.57 லட்சத்திற்கு எள் விற்பனையானது.

 

The post ₹22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: