இந்த வழக்கை முதலில் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. இதன்பின் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட போதிலும் முதல் நபராக கருதப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த சவாத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சவாத் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரில் வேறொரு பெயரில் தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை உறுதி செய்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சவாத் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பேராசிரியரின் கையை வெட்டிய 13 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.