அங்கித் திவாரி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை மனுக்கள் மீது நாளை உத்தரவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரியை காவலில் விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. அமலாக்கத்துறை விசாரணையின்போது தங்கள் தரப்பும் உடன் இருக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையும் மனுத் தாக்கல் செய்திருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் மனுவை ஏற்பதா, இல்லையா என்பது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதி மோகனா தெரிவித்துள்ளார்.

The post அங்கித் திவாரி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை மனுக்கள் மீது நாளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: