நிகழ்ச்சியில் மயிலை ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி அபவர்கானந்தாஜி, விவேகானந்த வித்யாலயா பள்ளி தாளாளர் சீனிவாசன், முதல்வர் சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘கவர்னர் பதவி என்பது முழுமையான அதிகாரம் பெற்ற பதவி அல்ல. அரசியல் சாசனத்தை கட்டி காக்க வேண்டிய ஒரு பதவி. மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு. உங்கள் கடமை எது, அதிகாரம் எது என்பதை உணர்ந்து நிற்க வேண்டும்’’ என்றார்.
The post கவர்னர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல மக்களின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு: ஜார்கண்ட் ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.