இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் உரை

சென்னை: இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது. முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே இமாலய சாதனை படைத்துள்ளார். உலகிலேயே முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவேண்டும். முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.

 

 

 

 

The post இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் உரை appeared first on Dinakaran.

Related Stories: