26 அறிவியல் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லையில் சோதனை

நெல்லை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிதான் தவான் பகுதியில் தேசிய அறிவியல் அருங்காட்சியக குழும தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு இ-மெயில் வந்தது. அதில், ‘ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர், நாடு முழுவதும் உள்ள அனைத்து அறிவியல் மையங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள அறிவியல் மையத்திலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும், மோப்பநாய் உதவியுடனும் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வெடி பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

The post 26 அறிவியல் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லையில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: