ராஜஸ்தான் இடைத்தேர்தலில் 70% வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் போட்டியிட்டார். இங்கு 70% வாக்குகள் பதிவாகி இருந்தது.

The post ராஜஸ்தான் இடைத்தேர்தலில் 70% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: