வீணாகும் குடிநீர்

போச்சம்பள்ளி, ஜன.4: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், தளிகைப்பட்டி தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. அப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி பல வருடங்களுக்கு முன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அந்த நீரேற்றும் தொட்டியில் இருந்து காட்டகரம், மகாதேவகொல்லஅள்ளி, அத்திகானூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தளிகைப்பட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து, காட்டகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெள்ளைபாறையூர் செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்கிறது. இதனால் தினசரி ஆயிரக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் செல்லும் பகுதிகளுக்கு, முறையாக தண்ணீர் செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வெள்ளைபாறையூர் செல்லும் தார் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: